03/10/2018

சீட்டு நடத்தி மோசடி: தம்­ப­தி­யரை பிடிக்க தனிப்­படை போலீ­சார் கேரளா விரைந்தனர்...


ஸ்ரீவை­குண்­டத்­தில் சீட்டு நடத்தி பல­லட்­சம் ரூபாயை மோசடி செய்­து­விட்டு தலை­ம­றை­வான தம்­ப­தி­யரை பிடிக்க தனிப்­படை போலீ­சார்   கேரளா விரைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவை­குண்­டம் சிவன் கோயில் தெருவை சேர்ந்­த­வர் சிதம்­ப­ரம். இவ­ரது மகன் பாலாஜி (36). பாலாஜி, தனது மனைவி சுலோச்­சனா (32) மற்­றும் தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் சேர்ந்து ஏலச்­சீட்டு கம்­பெனி நடத்தி வந்­தார். இந்த சீட்­டுக் கம்­பெ­னி­யில் ஸ்ரீவை­குண்­டம், முன்­னீர் காலனி, புதுக்­குடி உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளை­யும் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்­பட்­ட­வர்­கள் ரூ.50ஆயி­ரம், ரூ.1லட்­சம், ரூ.2லட்­சம், ரூ.3லட்­சம் என்ற நான்கு பிரி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் சீட்­டில் சேர்ந்து பணம் கட்டி வந்­த­னர்.

கடந்த 2 வரு­டங்­க­ளுக்­கும் மேலாக சீட்­டுப்­ப­ணம் செலுத்தி வந்­த­நி­லை­யில், இன்­னும் இரண்டு மாதங்­க­ளில் சீட்டு ஏலம் முடி­வ­டை­ய­வும் உள்­ளது. இத­னால் பணம் கட்­டி­ய­வர்­கள் தங்­க­ளுக்கு லட்­சக்­க­ணக்­கில் சீட்­டுப்­ப­ணம் கிடைத்து விடும் என்ற நம்­பிக்­கை­யில் இருந்­த­னர். இந்­நி­லை­யில், கடந்த மாதம் 1ம் தேதி இரவு பாலாஜி தனது மனைவி சுலோச்­சனா, தனது குழந்­தை­கள் மற்­றும் மாம­னார் முரு­கன், மாமி­யார் ராணி உள்­ளிட்ட குடும்­பத்­தி­ன­ரு­டன் வீட்டை காலி செய்­து­விட்டு தலை­ம­றை­வாகி விட்­டார். இத­னை­ய­றிந்த சீட்­டுப்­ப­ணம் கட்­டி­ய­வர்­கள் அனை­வ­ரும் பெரும் அதிர்ச்சி அடைந்­த­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளான ஞான­துரை, ஆசீர், திரு­நா­வுக்­க­ரசு ஆகி­யோர் மாவட்ட ஆட்சியர் சந்­தீப் நந்­துாரி, எஸ்.பி., முரளி ரம்பா, ஸ்ரீவை­குண்­டம் டி.எஸ்.பி., சகா­ய­ஜோஸ் மற்­றும் ஸ்ரீவை­குண்­டம் காவல் நிலை­யத்­தில்  புகார் கொடுத்­த­னர்.

இந்த புகா­ரில் எஸ்.பி., உத்­த­ர­வின்­ பே­ரில் ஸ்ரீவை­குண்­டம் போலீஸ் இன்ஸ்­பெக்­டர் வெங்­க­டே­ஷன் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கி­றார். சீட்டு நடத்தி பல லட்­சத்தை மோசடி செய்து விட்டு தலை­ம­றை­வான பாலாஜி, அவ­ரது மனைவி சுலோச்­சனா, பாலா­ஜி­யின் பெற்­றோர் மற்­றும் மாம­னார், மாமி­யார் ஆகி­யோரை போலீ­சார் வலை­வீசி தேடி வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், பாலாஜி தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் கேர­ளா­வில் பதுங்­கி­யி­ருப்­ப­தாக கிடைத்த ரக­சிய தக­வ­லின் அடிப்­ப­டை­யில் அவரை பிடிக்க சப்-­இன்ஸ்­பெக்­டர் முரு­கப்­பெ­ரு­மாள் தலை­மை­யில் தனிப்­படை அமைக்­கப்­பட்­டுள்­ளது. தனிப்­படை போலீ­சார் தலை­ம­றை­வான தம்­ப­தி­யரை வலை­வீசி தேடி வரு­கின்­ற­னர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.