12/10/2018

கெடுவார்.....


நிட்டூர மாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரப்போனும் முட்டவே கூசிநிலை நில்லாக் குலக்கொடியும்
கூசிய வேசியும் கெட்டு விடும்.

பொருள்: அடாவடித்தனமாகப் பொருள் தேடும் மன்னவன், இட்டது எதுவாயினும் அதனை வாழ்த்தாத பிச்சைக்காரன், கூச்சப்படாத குலமகள் மற்றும் கூச்சப்படும் விலைமகள் ஆகியோர் வாழ்வு கெட்டுவிடும் என்கிறார் ஔவையார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.