26/10/2018

இலுமினாட்டிகள் ஒரு முன்னறிமுகம்...


உலகை அடிமையாக்க துடிக்கும் அடிமைகள் பற்றிய ஒரு சின்ன அறிமுகம்..

இலுமினாட்டிகள், ஜல்லிகட்டு போரட்டத்திற்கு பிறகு நம்மில் சிலருக்கு மட்டுமே இந்த வார்த்தை புதிதாக இருக்கும் என்று கருதுகிறேன். இன்று உலகில் நடக்கும் 90% அதிகமான பிரச்சனைகளை திரைக்கு பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் இரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த இலுமினாட்டிகள்.

தொடக்கம்: சற்றேறக் குறைய சுமார் 5000 வருடங்களுக்கு முன் பேரரசர் சாலமனின் (pbuh) ஆட்சி காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஆற்றலின் மீது கொண்ட கர்வத்தால் தன்னை வெல்ல யாருமில்லை என்று ஒருவன் எண்ணிக் கொண்டிருந்தான் (A1 13). அவன் மனித இனத்தை சேர்ந்தவன் இல்லை. இந்திய மரபு வழி கலாச்சாரம் ராக்ஷ்சர்கள் என்று அடையாளப்படுத்தும் ஒரு (ஜின்) இனத்தை சேர்ந்தவன்.

இந்த இனத்தை சேர்ந்தவர்களைத் தான் நாம் வேற்றுகிரக வாசிகள் என்று அழைக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவனது கர்வத்தினால் அவனுக்கு ஏற்பட்ட பேராசையால் அவன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் அடைக்கி ஆள வேண்டும் என்று எண்ணத்துடங்கினான். 

இறைவன் பேரரசர் சாலமனுக்கு (pbuh) முழு மனித ஆற்றலையும் உணர்ந்து அதை பயன்படுத்தும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்திருந்தான். அதன் மூலம் அவர் பூமியில் இருந்த (மனித, ரக்ஷ்ச, பறவை, விலங்கு, காற்று என) அனைத்து இனங்களின் மீதும் அதிகாரம் செலுத்தி ஆட்சி புரிந்தார்.

இவரது ஆட்சி, A1 13 கு தனது பேராசையை செயல்படுத்தி வெற்றியடைய முடியும் என்ற எண்ணத்திற்கு வழுசேர்த்தது.

எனவே அவன் தனது திட்டங்களை செயல்படுத்த தொடங்கினான். அதேகால கட்டத்தில் பாபிலோனில் வாழ்ந்த ஒருவனை (தஜ்ஜால்) இவன் சந்தித்தான், அந்த மனிதனும் அரசர் தாவூதின் (pbuh) குடும்பத்தை சேர்ந்தவன் தான், ஒருவகைக்கு பேரரசர் சாலமனுக்கு (pbuh) சகோதர முறை. பேரரசர் சாலமனை (pbuh) போல் அவனும் (ஓரளவுக்கு) மனித ஆற்றலை உணர்ந்திருந்தான், அதே நேரத்தில், அவனுக்கு பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மீது பெரும் பொறாமை இருந்தது.

அதை அறிந்து கொண்ட A1 13 அவனோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான், அதன் படி முழு மனித ஆற்றலை உணர்ந்து பயன்படுத்தும் வழி முறைகளை இவன் அவனுக்கு கற்றுக் கொடுத்து பூமியில் உள்ள அனைத்து இனங்களின் மீதும் ஆட்சி செலுத்தும் அரசனாக அவனை நியமிப்பதாகவும், அதற்கு பகரமாக அவன் தனக்கு கட்டுபட்டவனாக இருந்து தனது இலக்கை அடைய போராட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டான்.

பிறகு அவனுக்கு மனித உடலை சறியாக பயன்படுத்தும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்தான். தஜ்ஜால் முன்பைவிட இப்போது அதிக அளவில் மனித ஆற்றலை பயன்படுத்தக் கூடியவனாக இருந்தான்.

இந்த நிலையில் வேறொரு காரணத்திற்காக A1 13 யின் குடும்பத்தார்கள் மற்றும் அவனது இனத்தின் மீது நடத்தபட்ட சிறைப்பிடிப்பில் பேரரசர் சாலமனால் (pbuh) இவன் எதேச்சையாக சிறை பிடிக்கப்பட்டான். அவசரபட்டு எதையாவது செய்யப்போய் அது தனது இலக்கை அடைவதை விட்டும் தன்னை தடுத்துவிடலாம் என்பதால் அவன் எதுவும் செய்யாமல் பேரரசர் சாலமனுக்கு கட்டுபட்டவன் போல் அமைதியாய் இருந்தான்.

ஆனால் முன்பை விட தனது ஆற்றலை அதிகம் உணர்ந்திருந்த தஜ்ஜாலின் பொறாமை அவனை அமைதியாக இருக்க விடவில்லை. அவன் பேரரசர் சாலமனுக்கு எதிராக கலகம் செய்யத் தொடங்கினான்.

தானே உண்மையான கடவுள் என்று அவன் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய தொடங்கினான். அதனால் பேரரசர் சாலமன் (pbuh) அவனோடு போர் செய்து அவனை வீழ்த்தினார்.

அவர் அவனை கொல்லவே விரும்பினார், என்றாலும் அது முடியாமல் போகவே, (கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள) ஒரு தீவில் அவனை சிறை வைத்தார்.

என்றாவது ஒருநாள் இவன் இந்த சிறையை உடைத்தக் கொண்டு மக்களுக்கு மத்தியில் வெளியாகுவான் என்று பேரரசர் சாலமன் (pbuh) கருதினார்.

எனவே, அவர் அவனது நெற்றியில் காஃப் ஃபே ரே அதாவது மறுப்பாளன் என்று வாள் கொண்டு எழுதினார், அவன் வெளிப்படும் போது மக்கள் அதைக் கொண்டு அவனை அடையாளம் கண்டு கொள்வார்கள்.

பேரரசர் சாலமனின் (pbuh) மரணத்திற்கு பிறகு விடுதலை அடைந்த A1 13 மிகுந்த சிரமத்திற்கு பிறகு தஜ்ஜால் சிறை வைக்கப்பட்ட அந்த தீவை கண்டு பிடித்தான்.

அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் தஜ்ஜாலை விடிவிக்க முடியவில்லை.

(பிற்காலத்தில் அவனை விடுவிப்பதற்கான சரியான கால சூழலை பூமியில் ஏற்படுத்திய பிறகு அந்த சங்கிலியை உடைத்துக் கொள்ளலாம் என்று தன் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறான் என்று சில ஆய்வுக்கு குறிப்புகள் சொல்கின்றன.).

பிறகு அவன் அரசர் தாவூதின் குடும்பத்தார்களில் தஜ்ஜாலை போலவே பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மீது பொறாமை கொண்ட 13 நபர்களை தேர்ந்தெடுத்தான்.

பேரரசர் சாலமனின் (pbuh) ஆட்சி கட்டிலுக்கு கீழ் பொதைக்கப் பட்டிருந்த ஆட்சி குறிப்புகளை திருடி அதற்கு இடையிடையில் சூனியத்திற்கான (காபாலா) மந்திரங்களை எழுதி இதன் மூலம் தான் சாலமன் (pbuh) ஆட்சி நடத்தினார் என்று அவர்களை நம்ம வைத்தான்.

இவற்றை முயற்சி செய்தால் தஜ்ஜாலை விடுதலை செய்து அவனது தலைமையில் நீங்கள் இந்த பூமி முழுவதையும் ஆளலாம் என்று பேராசை காட்டினான்.

இவ்வாறாக 13 அடிமைகள் கொண்டு தொடங்கப்பட்ட இந்த குழுவும், இந்த குழுவையும் இந்த குழுவின் மூலம் உலகையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கும் அந்த 13 பேரின் இரத்தவழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இலுமினாட்டிகள் என்று அறியப்படுகிறார்கள்.

நோக்கம்:

இலுமினாட்டிகள் இந்த வார்த்தைக்கு, ஒளி பெற்றவர்கள் அல்லது ஞானம், முக்தி அடைந்தவர்கள் என்று பொருள், தாங்கள் மட்டுமே அதீத ஞானம் பெற்றவர்கள் என்றும் தாங்கள் மட்டுமே உலகை ஆள தகுதிவாய்ந்தவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு இரகசிய குழுவை சேர்ந்த 13 குடும்பத்தார்களை குறிப்பதற்கு இப்போது இந்த சொல் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருகிறது.

இவர்களது நோக்கம் என்னவென்பதை இவர்களது பாஷையில் சொல்வதென்றால் ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். The New World Order (NWO) அதாவது புதிய உலக கட்டளை. புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால், பூமி முழுவதையும் ஒரே தலைமைக்கு கீழ் அதாவது தங்களது அரசனது ஆட்சி அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே இவர்களது நோக்கம், இதையே இவர்கள் NWO என்று அழைக்கின்றனர்.

கடந்த 5000 வருடங்களாக தங்களது நோக்கத்தில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பெரும்பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீண்ட காலமாக இவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு மகா யுத்தம், அதில் தங்களின் அரசனான தஜ்ஜாலையும் அவனது கடவுளான A1 13யையும் எதிர்க்கும் மக்களை முழுமையாக அழித்து விட்டு, மக்கள் தொகையை கணிசமாக குறைத்து விட்டு, பிறகு தஜ்ஜாலை விடுவித்து பூமி முழுவதையும் ஒற்றை தலைமைக்கு கீழ் கொண்டு வந்து இறுதியாக A1 13ஐ இந்த பிரபஞ்சத்தின் கடவுளாக ஆக்க வேண்டும் என்பதே இவர்களின் ஒரே நோக்கம்.

அந்த மகா யுத்தத்தில், இலுமினாட்டிகள் வென்றால் எஞ்சி இருக்கும் மக்களை அடிமைப்படுத்தி ஆள தஜ்ஜால் விடுவிக்கப்பட்டு அழைத்து வரப்படுவான்.

நாம் வென்றால் யுத்தத்தின் போக்கை கட்டுப்படுத்தி தனக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்க (கோபத்தில்) அவனே சங்கிலிகளை உடைத்துக் கொண்டு வெளியாக்குவான்.

ஆக, யார் வென்றாலும், தோற்றாலும் யுத்தத்தின் முடிவில் தஜ்ஜால் வெளிப்படுவான்.

துருவ மாற்றக் காலத்தில் தான் அவன் வெளிப்பட வேண்டும் என்ற A1 13யின் திட்டப் படி அந்த மகா யுத்தம் துருவ மாற்றக் காலத்தை கணக்கிட்டே நடத்தப்படும்.

பி.கு: இலுமினாட்டிகளின் தொடக்கம் பற்றியும் A1 13 பற்றியும் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களுக்கு மதரீதியான 100% நேரடி ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

மதரீதியான குறிப்புகளையும், மதங்களுக்கு வெளியில் இருந்து கிடைக்கும் குறிப்புகளையும் ஒருங்கிணைக்கும் பொது கிடைத்த தர்க்க ரீதியான வடிவமைப்பையே நான் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன். இவர்களின் தொடக்கம் பற்றிய எனது குறிப்புகள் 80% ஆதாரப் பூர்வமானதும் உறுதி செய்யப்பட்டதுமே தவிர 100% அல்ல. இறைவன் நாடினால் கூடிய விரைவில் 100% வெளிப்படையான ஆதாரங்கள் கிடைக்கும்...

தகவல் - முஸ்தபா

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.