26/10/2018

தமிழின துரோகிகள்.. விசிக திருமா vs பாஜக தமிழிசை...


சென்னையில் 1000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள மால் ஒன்று. அதை திராவிடன் ஒருவருக்கு வாங்கிக் கொடுக்க திருமாவளவனும் , மார்வாடி ஒருவருக்கு வாங்கிக் கொடுக்க தமிழிசையும்  முயற்சி செய்ததில் ஏற்பட்ட நேரடி மோதலின் காரணமாக பல விஷயங்கள் வெளியில் வந்து விட்டது.

இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் வெளியில்  பேசி விட்டார்கள்.

நிலங்களை மிரட்டி கையகப்படுத்துவது தான் திருமாவளவனின் முழுநேர வேலை என்று திருமாவளவனின் பெயரை நேரடியாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியே தமிழிசை பேட்டி கொடுத்தார்.

அதற்கு திருமாவளவன் பதில் சொல்லாவிட்டாலும், அவரது கட்சியினர், தமிழிசை வட சென்னையில் பாதி இடங்களை  வளைத்து போட்டு விட்டார் என்று புகார் சொல்லி, தமிழிசையின் வீட்டின் முன் போராட்டங்கள் நடத்தி அவரது கொடும்பாவியை எரித்து மகிழ்ந்தார்கள்.

மொத்தத்தில் இருவருக்கும் இடையிலான மோதலே இவர்கள்  யார், எப்பேர்ப்பட்ட கிராதகர்கள் என்பதை  மக்களுக்கு அடையாளம் காட்டி விட்டது.

1000  கோடி பெறுமானமுள்ள கட்டிடம் என்றால், 2  சதவீத கமிஷனாக எப்படியும் 20  கோடி கிடைக்கும். இதற்காக நடந்த நேரடி மோதலில்  இவர்கள் இனங்காணப்பட்டு விட்டார்கள்.

இவர் இந்தப்பக்கம், அவர் அந்தப்பக்கம் என்று வேறுவேறு திசைகளில் இவர்கள்  கொள்ளையில் ஈடுபட்டிருந்தால் இவர்களை  பற்றி நமக்கு தெரிய வந்திருக்காது.

ஒரே வியாபாரத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட நேரடி மோதல் இவர்களின் நமக்கு உணர்த்தி விட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.