24/11/2018

அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை பயன்களா..?


சாதரணமாக அனைவரின் வீட்டிலும் உணவு சமைக்கும் போது, அரிசியை கழுவி தான் சமைப்பார்கள்..

ஆனால் அரிசி கழுவிய நீரை பொருட்படுத்தாமல் கீழே ஊற்றி விடுவார்கள்..

அதன் பயன் தெரிந்தால் இனி யாரும் கிழே ஊற்ற மாட்டார்கள்..

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம்.

சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு அதை சுட வைத்து அந்த தண்ணீரை கொண்டு குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றவும்.

உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்.

இதனால் விரைவாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும்.

அவை இன்றும் கிராம புறங்களில் பின்பற்றி வருகின்றனர்.

அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்..

பின்னர் அந்த நீரை வடிகட்டவேண்டும்.

வடிகட்டிய நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும்.

இவ்வாறு செய்தால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவு பெரும்.

ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.

தினமும் ஒவ்வொரு முறையும் முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.

கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.

இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

இதனை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும் போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.