30/11/2018

தியானம்...


தியானம் செய்யும் போது சூட்சும கட்டு போட்டு தான் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தீய சக்திகள் தொல்லை செய்யும் என்பது எப்படி? என்று கேள்வி...

தியானம் செய்யும் போது சூட்சும கட்டு போடுவது என்பது உண்மை தான் அதில் சந்தேகம் வேண்டாம்.

இந்த சூட்சும கட்டில் பல வகைகள் உண்டு மந்திர கட்டு, எந்திர கட்டு, பிரணவ கட்டு, பிராண கட்டு, குரு கட்டு என்று சொல்ல கூடிய தீட்சை இப்படி பல உண்டு.

இவைகளெல்லாம் அனைவராலும் செய்ய முடியாது.

ஆனால் பிராண கட்டு, பிரணவ கட்டு, இவைகள் கொஞ்சம் முயற்சி செய்தால் அனைவராலும் கூடும்.

குரு கட்டு என்பது தியானத்தில் நல்ல தேர்ச்சி அடைந்த குருவிடம் தீட்சை வாங்கி கொண்டால் அந்த ஆற்றல் உங்களுக்கு பாதுகாத்து கட்டு போல் செயல்படும்.

அதற்காக யாரும் கட்டணம் கட்டி தீட்சை பெற கிளம்பி விடாதீர்கள்.

பிராண கட்டு என்பது சுவாச பயிற்சி செய்து விட்டு தியானம் செய்வது.

பிரணவ கட்டு என்பது பிரணவ மந்திரத்தை சத்தமாக நீளமாக அதாவது ஓ................ம் என்று பத்து முறை உச்சரித்து விட்டு தியானிப்பது.

இவைகள் அனைத்தையும் விட தீட்சை மற்றும் விளக்கு ஏற்றி வைத்து தியானிப்பது நல்ல பாதுகாப்பையும் வெற்றியையும் தரும்.

இது நான் கண்ட அனுபவமும் கூட திருச்சிற்றம்பலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.