01/12/2018

இருப்பு நிலை...


உண்மையை அறிய எல்லாப் பொய்மைகளையும் மாயைகளையும் நீங்கள் விட்டு விட வேண்டும்.

அந்தப் பொய்மைகளில் மிகப் பெரியது " நான் " என்ற அகங்காரம் தான்.

கடவுளை நம்புவதற்கு அவரை அறிய வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் கடவுளை அறிந்த பிறகு நம்புவதற்கு ஒன்றும் இல்லை.

உங்களுடைய நான் என்ற மறைவே கடவுளின் உதயமாகும்.

கடவுள் என்பது...

வாழ்வு
அன்பு
ஒளி
பேரியக்க பிரபஞ்ச அனுபவம்
உங்களது உள் உணர்வு
உங்கள் உள்ளே மலரும் நறுமணம்

கடவுள் என்ற மலரை நீங்கள் பார்க்க முடியாது.

அதன் நறுமணத்தை நீங்கள் நுகரலாம்.

எல்லாமே தெய்வீகம் தான்..

இந்த
மலர்கள்
பறவைகள்
பாறைகள்
ஆறுகள்
மரங்கள்

இவைகள் யாவும் கடவுட் தன்மையுடன் மிளிர்கின்றன.

நீங்கள் உண்மையை அறிந்து கொள்ளுவதை நம்பிக்கை தடுக்கிறது.

பொய்யான நம்பிக்கைகளால் மக்கள் பிளவு பட்டு நிற்கிறார்கள்.

நீங்கள் யார் என்றே உங்களுக்குத் தெரியாத போது...

கடவுள் யார் என்று எப்படி உங்களுக்குத் தெரிய போகிறது..

கடவுள் உங்களுக்கு மிக அருகில்..

இதயத்தின் வழியாகவும்..

மூச்சின் வழியாகவும் தன்னை உணர்த்திக் கொண்டிருக்கிறார்..

உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் உங்கள் பயத்தில் இருந்து உருவானவைகள் தான்.

அவைகள் உங்கள்
அன்பிலிருந்தோ..

உண்மையை அறிந்ததிலிருந்தோ..

சொந்த அனுபவத்தில் இருந்தோ..

உண்டானதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.