26/12/2018

எரிந்த நிலையில் கிடந்த சடலம். போலீஸார் தீவிர விசாரணை...


சாயல்குடி அருகே நரிப்பையூர் எஸ். தரைக்குடி  கிராமங்களுக்கு இடைப்பட்ட பனங்காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த தகவலையடுத்து வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு எரிந்த நிலையில் துர்நாற்றத்துடன் இருந்த சடலம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த சம்பவம், இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்த நபர் ஆணா அல்லது பெண்ணா என்றும், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.