22/12/2020

தொழுகிறேன்...

 


நண்பர்களே. எனக்காகவும், என் பிள்ளைகளுக்காகவும் நடக்கும் போராட்டத்திற்கு உங்கள் உயிரை உரமாக்கியிருக்கிறீர்கள்.

பஞ்சாப் விவசாயிகள் கடனில் மூழ்கிக் கொண்டிருப்பதை நான்றிவேன்.

இந்த நிலையில் நீங்கள் உயிர் துறந்திருப்பது உங்கள் குடும்பத்தவர்களுக்கு எத்தகைய வலியை, சிரமங்களைத் தரும் என்பதை உணர்கிறேன்.

உங்களது குழந்தைகளின் கனவுகள் கலைந்து போயிருக்கும்.

வழக்கம் போல் வீரத்தோடு உங்கள் குடும்பத்தவர்கள் இந்த இழப்பைத் தாங்கிடுவார்கள். ஆனால் வலி என்றும் இருக்கும்.

மரணித்தவர்களையும் வலி தாங்கி நிற்கும் குடும்பத்தவர்களையும் தொழுது பணிகிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.