05/03/2021

குட்டி கதை...


ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..

அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்..

ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலை செய்யும் இடத்தில் தான் போன் பேசுகிறேன்..

நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி..

மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்து தான் நான் போன் செய்கிறேன் என்றான்..

நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்..

வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப் போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்து தான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர் 😁

உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்..

இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா..?

😁😁😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.