05/03/2021

இயல்பை ஏற்றுக்கொள்...

 


வாழ்க்கையே ஒரு நதியின் பிரவாகம் போன்றது. 

மலையில் பிறந்த நதி கடலில் சென்று முடிவது போல கருவறையில் பிறந்த வாழ்வு கல்லறையில் முடிகிறது.

இடையிடையே எத்தனையோ மேடு பள்ளங்கள், ஆரவாரங்கள், மோதல்கள்.

அத்தனை ரணங்களையும் போராட்டங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்.

வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியே ஏற்றுக்கொள். 

எதையும்  திணிக்காதே. எதையும் மறுக்காதே. 

இயல்பை இயல்பு என உணர்ந்து அந்த இயல்போடு ஏற்றுக் கொள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.