05/03/2021

காதல்...

 


வெள்ளைக் காகிதமாய் இருந்த 

என் மனதில்...

சிறு கிறுக்கல்களுடன் 

விடைப்பெற்றுச் சென்றாய்.. 

உனது கிறுக்கல்கள் 

என்னைக் கிறுக்கனாக்கின.. 

நண்பர்கள் என்னைக் 

காதல் கிறுக்கன் என்றனர்..

நண்பர்களுக்குப் புரியாது... 

என் மனதில் உனது கிறுக்கல்கள் 

எனது காதல் பக்கத்தின் 

முதல் கவிதை என்று...

உன் நினைவுகளின் 

நினைவுகளில் நான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.