03/03/2021

வாழ்க்கை ஒரு பரிசு...

 


வாழ்க்கை ஒரு சிறைச்சாலை அல்ல. அது ஒரு தண்டனையும் அல்ல. அது ஒரு பரிசு. 

அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டு உள்ளது. இப்போது அதை ரசித்து மகிழ்வது உங்கள் கடமை. அதை ரசிக்கா  விட்டால்  அது ஒரு பாவம். 

நீங்கள் வாழ்க்கையை அழகு படுத்தவில்லை என்றால், அது இருந்தபடியே அதை விட்டு வைத்தால், அது உயிர் வாழ்தலுக்கு எதிரானது. 

வாழ்வை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள். மேலும் சற்றே அழகானதாக, நறுமணம் மிக்கதாக ஆக்குங்கள்..

வாழ்க்கை ஒரு தேடுதலாக இருக்க வேண்டும், ஒரு ஆசையாக அல்ல.

ஒரு நாட்டின் அதிபராகவோ, பிரதமராகவோ ஆக வேண்டும் என்பது போன்ற லட்சியம் இல்லாமல், நான் யார்? என்று கண்டறியும் ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்.

தான் யார் என்று அறியாத மக்கள் யாராகவோ ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு வினோதம் தான். 

அவர்கள் இப்போது யாராக இருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது..

நீ அக்கறை காட்டத் தேவையில்லாத விசயங்கள் இருக்கின்றன. நீ அவற்றை வெறுமனே கவனித்தால் போதும். அவை சென்று விடும். 

கோபம், பொறாமை, பேராசை -- இருளின் இந்த பாகங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது. 

அதாவது அவற்றை நீ கவனித்தால் போதும், அவை மறையத் தொடங்கிவிடும். நீ வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. நல்லது கெட்டது என்பதற்கு வேறு எந்த வரைமுறையும் கிடையாது. கவனிப்பது தான் அதை முடிவு செய்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.