18/09/2021

ஈ.வெ.ரா எனும் பெரியார் அவரது பெருமைக்குரிய பெண்ணியம். அதைப் பின்பற்றுவோர் பலர் உண்டு...

 


ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள்.

ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்.

-ஆதாரம்: விடுதலை 02.03.1969.

வேசி மகன் என்று பார்ப்பான் சொன்னதைவிட அருவருப்பாக இல்லை ஈவேரா பேசியது?

மேலும்..... விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது. முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது.

இளைஞர் கெட்டுப் போவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள்..

-ஆதாரம்- தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973).

கையில் பணத்தையும், பத்திரிகையையும் வைத்துக் கொண்டு ஒரு கேடி, ரௌடி..... அரசியல்வாதியாக விளங்கினால் பெண்ணியம் இப்படித்தான் பெருமைப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.