28/04/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 40...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனத்தின் பகுதி 40-வது பகுதியாகும். மக்களின் மனோதிடத்தை அதிகரிக்கும் பல சம்பவங்கள் இந்திய தேசத்தில் நடக்கும் குறிப்புகளை பற்றி தெரிவிக்கும் பகுதியே இந்த 40-வது தீர்க்க தரிசன குறிப்புகளாகும்.

இந்திய மண்ணில் பல அரசியல் மாற்றங்கள் நிகழும் காலமாக இருக்கும் என்று 40-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது. யாரும் எதிர்பாராத ஒருவர் ஆட்சி பீடத்தில் அமரும் சூழ்நிலை உருவாகலாம் என்று இந்த 40வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.


இந்திய அரசியல் அமைப்பை பயன்படுத்தி தன்னை ஒழித்து கொண்டு வாழும் ஊழல் பேர்வழிகளுக்கு இது போதாத காலம் என்றும், பல ஆன்மீக அமைப்புகளில் தேங்கியுள்ள கோடிகணக்கான பணங்கள் இந்திய தேசத்தின் அரசு கஜானாவுக்கு திரும்ப வரும் காலம் இதுவென்று 40-வது தீர்க்க தரிசனம் முக்கிய குறிப்பை தருகின்றது.

சமயம் சார்ந்த ஒரு அரசியல் அமைப்பு திடீரென்று மக்களிடத்தில் செல்வாக்கை இழக்கும் என்றும், இதனால் அரசியல் வட்டங்களில் ஒரு குழப்ப நிலை ஏற்படும் என்றும், அதே சமயத்தில் தமிழக அரசியலில் ஒரு மகத்தான மாற்றம் நிகழும் என்றும், தென்னிந்திய திரை உலகம் அச்சமயத்தில் பெரும் மகிழ்ச்சி கொள்ளும் என்று ஒரு குறிப்பை 40-வது தீர்க்க தரிசனம் எடுத்து கூறுகிறது.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஒரு ஆன்மீக அமைப்பிலிருந்து பல இரகசியங்கள் அம்பலமாகும் என்றும், இதனால் தமிழக மக்களுக்கு ஆன்மீக அமைப்புகளின் மீது நம்பிக்கையின்மையும், வெறுப்புணர்ச்சியும் ஏற்படும் என்றும், அச்சமயத்தில் தெய்வீக அதிசயம் ஒன்று நிகழ்ந்து தமிழக மக்களை வேறு ஒரு பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று 40-வது தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


மறுஜென்மம் உண்மை என்பதை நிருபிக்கும் வகையில் இரண்டு அதிசய சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கும் என்றும், அது அன்னை ஆதிசக்தியின் அற்புதமாக திகழக்கூடிய ஒரு சம்பவமாக மக்கள் கருதுவார்கள் என்று 40-வது தீர்க்க தரிசனம் அதிசயமான குறிப்பை இங்கு வெளிப்படுத்துகிறது.

சித்தர்கள் வாழ்ந்த கொல்லிமலையில் ஒரு பாதாள அறை மக்களால் கண்டறியப்படும் என்றும், அங்கு சித்தர்களின் மாநாடு நடந்தற்கான அடையாளச்சுவடுகள் காணப்படும் என்றும், இதனால் மக்களின் மனதில் சித்தர்களை பற்றிய தேடுதல் அதிகமாகும் என்று 40-வது தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


குதம்பை சித்தர் தவமியற்றிய ஒரு புண்ணிய பூமியானது சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே மக்களால் கண்டறியப்படும் என்றும், அவரின் அறிய அற்புதங்கள் அப்பகுதி மக்களிடையே வெளிப்படும் என்று 40-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை எடுத்துக் கூறுகிறது.

சேலத்தின் மலைப்பகுதி ஒன்றில் ஒரு மர்மமான குகை மக்களால் கண்டறியப்படும் என்றும், அங்கு தேரையர் என்ற சித்தர் வசித்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெறும் என்றும், அவர் தேரையர் என்ற பெயரில் வாழ்ந்த இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் என்பது அப்போது தெரியவரும் என்றும், அவர் இயேசுவின் வருகையை காணவே இத்தனை ஆண்டுகள் அங்கு சூட்சும தேகத்துடன் தவத்தில் இருந்து வந்தார் என்ற உண்மையை மக்கள் அறியும் சமயத்தில் அங்கு மாபெரும் அதிசயம் ஒன்று நடைபெறும் என்று 40-வது தீர்க்க தரிசனம் மெய்பட ஒரு குறிப்பை தருகிறது.


உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை என்ற ஆன்மீக கூற்றுக்கு ஏற்ப சேலம் மாவட்டத்தில் பல அரிய இறை அதிசய நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கும் காலம் இக்காலம் என்றும், இறைவன் இறைவி இருவரும் இணைந்த புதைபொருள் இரகசியம் ஒன்று அப்பொழுது பூமியிலிருந்து வெளிப்படும் என்றும், அப்பொழுது 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தை (ஒரு சமூகம்) உலக மக்களே அறியும்படியான ஒரு அதிசயம் நிகழும் என்று 40-வது தீர்க்க தரிசனம் அரிய ஒரு குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.