28/04/2017

சேறும் சகதியுமாக மாறிய குட்டை, கோவை ஆனைகட்டி மலைப்பகுதி அருகே தண்ணீர் குடிக்க சென்ற யானை செற்றில் சிக்கி பரிதாப பலி...


கோவை ஆனைகட்டி மலைப்பகுதி அருகே உள்ள காட்டுப்பகுதியில் தண்ணீர் குடிக்க யானை வந்துள்ளது. அங்குள்ள குட்டை ஒன்றில் தண்ணீர் பருக நினைத்து அதில் இறங்கியுள்ளது. ஆனால் குட்டை சேறும் சகதியுமாக இருந்ததால் அதில் சிக்கிக் கொண்டு தவித்துள்ளது.

சத்தம் கேட்டு கிராமத்தினர், வனத்துறையினர் வந்து யானையை மீட்க போராடியுள்ளனர், எனினும் 10 வயதான பெண் யானை பரிதாமாக சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளது.

அரசியல்வாதிகளின் மெத்தனம் இன்னமும் தொடர்ந்தால், நீர் இருந்த குட்டை சேறும் சகதியுமாக மாறி யானைக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழக மக்களும் வரும் ஆபாயம் ஏற்படலாம் என்பது சமூக ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.

தமிழகத்தின் நீர் ஆதாரத்தை காப்பாற்ற போர்கால அடிப்படையில் தமிழச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பேற்று வருகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.