05/05/2017

தமிழா விழுத்தெழு...


தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என்று அடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்கின்ற கேரளா, கர்நாடகம் , ஆந்திரா போன்ற மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான ஆற்று மணலை தமிழகத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறதே அதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை இந்த திராவிட அரசுகள்?

இதற்கு பெயர் தான் இனப்பற்றோ.?

தங்களுக்குத் தேவையான ஆற்று மணலை தங்கள் ஆற்றுப் படுகைகளில் இருந்து எடுக்க யாரையும் மணல் அள்ள விடுவது இல்லை.

ஆனால் தங்களுக்குத் தேவையான மணலை இந்த மூன்று மாநிலங்களும் தமிழ்நாட்டில் இருந்து திருட்டுத் தனமாகவும், தமிழ்நாடு அரசுக்கு தெரிந்தும் மணலை கொள்ளையடித்துக் கொண்டு போய் கொண்டிருக்கின்றன.

இதில் கேரளா இங்கிருந்து மணலை வாங்கி மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் பெரும் பணம் சம்பாதிக்கின்றது.

இதற்கு இங்கிருக்கும் அவர்களின் உறவுகளான் திராவிட அரசியல்வாதிகள் பக்கபலமாக இருந்து பகல் கொள்ளைக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

நம் ஆற்றுவளம் , மணல் அனைத்தும் நம் கண்முன்னேயே கொள்ளை போய் கொண்டிருக்கிறது.

மீறி எதிர்ப்பவர்களைக் கொலை செய்யவும் இந்தக் கூட்டம் தயங்குவது இல்லை.

இதற்கு எல்லாம் தீர்வு தமிழர் நாட்டை தமிழனே ஆண்டால் தான் நம் செல்வம் கொள்ளை போவதைத் தடுக்க முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.