05/05/2017

பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பஸ்களை விடுவிக்குமாறு அதிகாரிகளிடம் கூறிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்...


தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் பேருந்துகளை எப்படி இயக்குவது என்பது குறித்து பேசுவதற்கு பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அந்த பகுதியை சேர்ந்த சட்டமன்ற துணை சபாநாயகர் ஜெயராமனும் கலந்து கொண்டுள்ளார்.


அப்பொழுது தனியார் பேருந்து உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க துணை சபாநாயர், அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட 2 பேருந்துகளை விடுவிக்குமாறு கூறியுள்ளார்.

இதில் அதிகாரிகள் அதிருப்தி அடைந்து மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்த பின்னரே இது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.