15/10/2017

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், வடபாதிமங்கலம் ஊராட்சியில் 2015-16 நிதியாண்டில் நடைபெற்ற முறை கேடுகள் தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளது...



அதில் ஒன்று, ரூ.60400க்கு சோடியம் மின் விளக்குகள் பெறப்பட்டதாக ரசீது உள்ளது. ரசீதில் தேதி இல்லை. அதற்கு காசோலையும் வழங்கபட்டுள்ளது.

ஆனால் ஊராட்சியில் உள்ள 270 மின் கம்பங்களில் ஒன்றில் கூட சோடியம் மெர்குரி வகை மின் விளக்குகள் இல்லை..

ரசீதுகள் போலியாக பெறப்பட்டு பணப்பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளது.

ஊழலில் துவக்கமே நாம் அலட்சியமாக இருப்பதுதான். கிராம சபை கூட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் இது போன்ற முறைகேடுகளை வெளிக் கொண்டு வாருங்கள்..

உங்கள் வரிப்பணம் கொள்ளை போவதை அனுமதிக்காதீர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.