15/10/2017

மாட்டிறைச்சி மனித கொலைகள்...


பசு இறைச்சியை வைத்திருந்ததாக கூறி ஜார்க்கண்டில் பஜ்ரங்தள் பயங்கரவாதிகளால் அடித்து கொல்லப்பட்ட அலீமுதீன் அன்ஸாரியின் படுகொலையை நேரில் கண்ட சாட்சியான ஜலீல் அன்ஸாரியின் மனைவி வாகன விபத்தில்  கொல்லப்பட்டுள்ளார்.

கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க சென்றபோது அடையாள சான்றுகளை கேட்டதால் அதனை எடுப்பதற்காக அலீமுதீன் அன்ஸாரியின் மகனுடன் பைக்கில் வீட்டிற்கு செல்லும் வழியில் பின்னால் வேகமாக வந்த வாகனம் வேண்டுமென்றே மோதியதில் அவர் பலியானார்.

அலீமுதீன் அன்ஸாரியின் மகனுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து திட்டமிட்டு நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவருக்கு ஏற்கனவே சாட்சியம் அளிக்கக்கூடாது என்று பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து வந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.