15/10/2017

தமிழினத் துரோகி திருமா வும் விசிக கட்சியும்...


கர்நாடகா மாநில விசிக, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரக்கூடாது என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஒரு சொட்டு நீர் தமிழகத்துக்கு தரப்பட்டால் கூட கர்நாடகாவில்  ஒரு தமிழனும் வாழ முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்று அவர்கள் கொக்கரித்து வருகிறார்கள்..

அது போல ஆந்திரா மாநில வசிக, பாலாற்றுக்கு குறுக்கே ஆந்திரா அரசு கட்டி வரும் தடுப்பணைக்கு தமிழ்நாடு தடை போடக்கூடாது. அப்படி தடை போடுமானால், தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர் செல்வதை உடனடியாக  தடுத்து நிறுத்துவோம் என்று முழங்கி வருகிறார்கள்.

கர்நாடகாவில், ஆந்திராவில் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற  ஒன்று இருக்கிறதா., அப்படி இருந்தால் அதன் தலைவர் யாராக இருக்கக்கூடும் என்று ஆராய்ந்து பார்த்தால், கர்நாடகா  மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆந்திரா மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக விடுதலை சிறுத்தைகளின் அந்தந்த மாநில பிரிவுகளாம். அவற்றுக்குத்  தலைவரும் நம்ம திருமாவளவன் தானாம்.

அடடே... தமிழ்நாட்டில் காவிரி வேண்டி போராட்டம். கர்நாடகாவில் காவிரி மறுப்புப் போராட்டம். தமிழ்நாட்டில் பாலாறு நீர் வேண்டி போராட்டம். ஆந்திராவில் பாலாறு நீர் மறுப்புப் போராட்டம்.

திராவிடன் கூட பழகி பழகி திருட்டு வேலையெல்லாம் நல்லா கத்துக்கிட்டு இருக்கார் தலைவரு.. ஆனா தேற மாட்டாரு...

https://m.youtube.com/watch?v=Kfob6c8sBfs

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.