17/11/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 14...


உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று இடம்பெறும் தீர்க்க தரிசனம் 14-ம் பகுதியாகும். இந்த 14-ம் தீர்க்க தரிசனம் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.

32-ம் தீர்க்க தரிசனமான நமது ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இடம் பெற்றுள்ள முக்கிய நிகழ்வு ஒன்று தற்போது தமிழகத்தில் கால தாமதமின்றி நடைபெறும் என்றும், அப்பொழுது பொள்ளாச்சி பகுதியில் பூமி சம்பந்தப்பட்ட திரட்டு ஒன்று வெளிவரும் என்றும், இதனால் தமிழகத்திற்கு வர உள்ள பேராபத்து ஒன்றின் அறிகுறியாக இதனை கருத வேண்டும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.



தற்சமயம் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்றும், அமைச்சரவையில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படும் சம்பவம் ஒன்று விரைந்து நடக்க இருப்பதாகவும் 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.




பூமி சம்பந்தப்பட்ட பேரதிர்வு சம்பவம் ஒன்று வடமாநிலத்தின் தென்பகுதியில் தற்போது நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்களின் மரண நிகழ்வு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும், இது நிகழ்வதற்கு முன் குஜராத்தில் மழைநீரால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஒன்று நடைபெற உள்ளதாக 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

காலஞ்சென்ற தமிழக முதல்வர் பற்றிய இரகசியம் ஒன்று தற்போது கசிய இருப்பதாகவும், இதனை மூத்த அரசியல்வாதி ஒருவர் பகிரங்கமாக வெளியிடுவார் என்றும், இதற்கு தமிழக நடிகர் ஒருவர் முக்கிய காரணமாக இருப்பார் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி இனி மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்றும், அதற்கான துவக்க காலமாக இக்காலம் இருக்கும் என்றும், தேவச் செய்தி ஒன்றை கிறிஸ்துவ சபை ஒன்று தமிழகத்தில் வெளியிடும் நிகழ்வு தற்போது நிகழ உள்ளதாக 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


தமிழகம் மழையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என்றும், மக்கள் தற்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் ஒரு எச்சரிக்கை குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.

தமிழக காவல்துறையில் பல மாற்றங்களை தமிழக அரசு மேற்க்கொள்ளும் என்றும், இதற்கு நீதித்துறையிலிருந்து பல கண்டனங்கள் எழும் என்றும், அச்சமயத்தில் தமிழகத்தில் மக்கள் மத்தியில் பல சலசலப்புகள் உருவாகும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


அமெரிக்க தென்பிராந்திய மாகாணம் ஒன்றில் பெரிய அழிவுச் சம்பவம் ஒன்று தற்போது நிகழப் போகிறது என்றும், அது உள்நாட்டில் உள்ள சிலரால் திட்டமிட்டு நடத்த இருப்பதாக 14-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு தருகின்றது.


பாபிலோன் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நிலப்பரப்பு என்றும், இப்பகுதியில் நடைபெறும் சிறு, சிறு சம்பவங்களை மக்கள் அரசு கவனிக்க வேண்டும் என்றும், இல்லையேல் சுயதோன்றிகளாக பலர் தற்போது அதிகாரத்திற்கு வரும் சம்பவங்கள் தற்சமயம் நடக்க கூடும் என 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.



பெங்களுர் நகரப்பகுதியில் திடீரென்று ஒரு சம்பவம் நடக்கும் என்றும், இது நடந்து முடிந்த 9-ம் நாளில் இதே போன்று ஒரு சம்பவம் ஆந்திராவில் நடக்கும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


இறைவனின் பிரவேசம் இப்பூமியில் தற்போது நிகழும் காலமாக இருப்பினும் அவரைப் பற்றி முழுமையாக மக்கள் அறியும் காலமாக வரும் 2018 ஜுன் மாதம் இருக்கும் என 14-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.

மனித வாழ்க்கை என்பது தான் சார்ந்துள்ள சமுதாயம் மட்டும் அல்ல, தான் சார்ந்திராத பல சமூக அமைப்புகள் அதற்கு காரணமாக இருப்பதை மக்கள் சமூகம் என்று ஏற்றுக் கொள்கிறதோ அன்றே மக்கள் மத்தியில் ஒரு இணக்கமான நட்பு தோன்றி வளர ஆரம்பித்து விடும். அந்தவகையில் உலகம் தழுவிய அளவில் ஒரு அமைப்பு ஒரு ஆன்மீகச் செய்தியினை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் என்றும், அச்சமயத்தில் அனைத்து சமூக அமைப்பை சார்ந்தவர்களும் அப்பொழுது ஒன்றிணைவார்கள் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கே தருகின்றது.

உண்மைகள் உறங்குவதில்லை என்ற வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 5-ம் தீர்க்க தரிசனப் பகுதியிலிருந்து ஒரு முக்கிய நிகழ்வு வரும் காலத்தில் அதாவது இன்னும் ஒரிரு மாதத்தில் மிகப்பெரிய அளவில் நடக்க இருப்பதாக 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


புனர்ஜென்ம கணக்கு ஒன்று இப்பூமியில் தற்போது திரும்பிப் பார்க்கப்பட உள்ளது என்றும், அதற்கான நிகழ்வு ஆன்மீக குடில் ஒன்றில் நடைபெற இருப்பதாகவும், அதில் “கல்கி“ பற்றிய குறிப்புச் செய்தியினை அடுத்த வாரத்தில் அச்சபை வெளியிடும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது. அதனை காண அதுவரை காத்திருப்போம்.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.