17/11/2017

ESP (Extra Sensory Perception)...


சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த ESP என அறியப்படுகின்றது.

இந்த ESP சக்தியில்..

இறந்த காலத்தை சொல்பவர்கள்
எதிர்காலத்தை சொல்பவர்கள்
நிகழ்காலத்தில் நடப்பவற்றை சொல்பவர்கள்
பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்

இன்றும் பலவகை உள்ளது, அது அவரவர் மூளையையும் அதன் சக்தியையும் வெளிப்படுத்துவதனைப் பொறுத்து வகைப்படும்.

மூளைக்குச் செல்லும் இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தி அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன.

இது நாம் யோசனை செய்யும் போது தலையை கைகளால் கசக்கிக் கொள்வது அல்லது நெற்றியின் பக்கத்தை தட்டுவது போன்ற செயற்பாடுகளை நாம் செய்வது இந்த வகையில் மின்னதிர்வினை ஏற்படுத்தும் செயல் முறையே.

சில எலிகளின் மூளையை பயன் படுத்தி இந்த மின்திர்வு செயற்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இதன் காரணமாக மூளையில் பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணரப்பட்டது.

மூளையில் இருக்கின்றன 4 பில்லியன்ஸ் செல்கள் ஆனால், மனிதர்கள் அதில் 10% வீதம் கூட முழுதாக பயன்படுத்துவதில்லை என்பதே ஆச்சரியம் மிக்க உண்மை, கணித அறிவியளாலர்களுக்கும் படிக்காத மனிதனுக்கும் கூட 100 செல்களுக்குள் தான் வித்தியாசம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 500 தொடக்கம் 1000 செல்களை படுத்திய காரணத்தால் அவர் அளப்பரிய கணித அறிவியளாலராக மாறினார் என்பதும் உண்மையே.

அமெரிக்காவில் மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம் பல விஞ்ஞானிகள் இணைந்து ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் தன்மைகள் பற்றியும் கலந்துரையாடினார்கள்..

அப்போது டாக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் கண்களை தியானத்தில் ஈடுபட்டுள்ளார் பின்னர் அவரது உடல் தானாக மேல் எழுந்து அவர்கள் கூடியிருந்த கட்டிடம் வழியாக சென்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

பௌதீக விதிகளை மீறிய இந்த செயல் காரணமாகவே ஆழ்மனதின் ஆற்றலும் ESP எனப்படும் மூளையின் அதீத சக்தியின் மேல் நம்பகத்தன்மை வளர்ந்து ஆராய்ச்சிகள் தொடர்ந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளில் ஒரு மனிதன் தனது ESP சக்தியின் மூலம் தன்னுடைய உடல் எடையினை அதிகரிக்க முடியும் 50 கிலோகிராம் உள்ள ஒருவர் 200 கிலோ கிராம் வரை தனது எடையினைக் கூட்டிக் கொள்ள முடியும் அதுவும் சர்வ சாதாரணமாக என கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வகையான பல ஆராய்ச்சிகளின் முடிவாக எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அவை மூளையின் சக்தியினால் செயற்படுத்த முடியும் என்பதும் அறியப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.