17/11/2017

பாஜக-வோடு பாமக கூட்டணிக்கு போயிடுவாங்களோனு சீமான் கேள்வி எழுப்பியதில் என்னடா தப்பு? ஏற்கனவே நீங்க கூட்டணி வைத்தவர்கள் தானே? - அண்ணன் சீமான் ரசிகர்களின் கேள்வி..


வரும் தேர்தலில் நாதக தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவை ஆதரித்து மேடைதோறும் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என ஓட்டு கேட்டு பரப்புரை செய்வார்கள். ஏனென்றால் ஏற்கனவே அதுபோல காசுவாங்கி கொண்டு பிரச்சாரம் செய்தவர் தானே நாதக..

ரசிகர்கள் : அப்போது சீமான் அதிமுகவை ஆதரித்தது ஏன் தெரியுமா? திமுக அரசை அடியோடு ஒழிக்கனும் என்று தான்.

ஆமா பாமகவும் தமிழீழத்தை அழித்து ஒழித்த காங்கிரசை ஒழிக்க தான் பாஜகவோடு கூட்டணி வைத்தோம்.  அது என்னடா நீங்க செய்யறத மட்டும் நியாயப்படுத்துறிங்க?

ரசிகர்கள் : சீமான் திராவிடம் மற்றும் பாஜகவோடு கூட்டணி வைக்க மாட்டோம்னு மேடையில் சத்தியம் செய்திருக்கிறார்.

ஈழப்பெண்ணை தான் திருமணம் செய்துக் கொள்வேன்னு கூடத்தான் மேடையில் சத்தியம் செய்தார். ஆனா தெலுங்கர் கயல்விழியை தானே கட்டிக்கிட்டார்..

பாமக தமிழராக தனித்து நிற்கும் போதெல்லாம் பெரியாரின் பேரனாக திமுக - அதிமுக வுக்காக கருப்புச் சட்டை போட்டு  பிரச்சாரம் செய்தவர் தானே உங்க அண்ணன் சீமான்..

திராவிடத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி கொண்டு.. வளர்ந்துள்ள தமிழர் கட்சியான பாமக வை தானே எதிர்த்துக் கொண்டிருக்கிறார் உங்க அண்ணன் சீமான்...

மேடையில் மட்டுமே பேசி பேசி கல்லா கட்டாமல்.. ஆக்கப் பூர்வமாக தமிழர்களுக்கு எதாவது நன்மைகளை செய்ய சொல்லுங்கள் உங்க அண்ணன் சீமானை...

அதன் பிறகு பாமக வை குறை சொல்லலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.