12/11/2017

புயல் வருகிறது.. தென் மாநிலங்களில் வெள்ள அபாயம்.. பிபிசி வானிலை எச்சரிக்கை...


சென்னையில் கனமழை வெளுக்குமாம்... வானிலை மையம். வார்னிங்...

சென்னை: வெள்ளம் ஏற்படுத்தும் வகையில் தென் இந்தியாவில் மழை பெய்யும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி.

அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது.

ஒரே நாளில் தாம்பரத்தில் 50 செ.மீ மழை பதிவாகி எச்சரிக்கையை ஊர்ஜிதப்படுத்தியது.

சென்னை பெருவெள்ளம் : பெரும் சேதம் பல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது.

இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

அதேபோல கடந்த சில நாட்கள் முன்பாக, பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டது.

அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை: புதுச்சேரி, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல பெரும் மழை, சென்னை உட்பட தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் பெய்தது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி வெள்ளம் ஏற்படும் அளவுக்கு தென் இந்தியாவிலும், கிழக்கு இந்தியாவிலும் அதிக மழை கொட்ட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.