04/01/2018

தமிழனுக்கு என்ன செய்தாய் என்று கேட்பவர்களுக்கு ரஜினியின் நெத்தியடி பதில்...


இதற்கு மேல என்ன செய்ய முடியும்?

தமிழனுக்கு என்ன செய்தாய் என்று கேட்கும் மூட்டாள்களுக்கு ரஜினியின் நெத்தியடி பதில்.. வாயடைத்துப்போன தலைவர்கள்...

சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா, கர்நாடகக்காரன், தமிழின விரோதி’ தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீகிரிங்களே..

ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்…

1) தன் சொத்து முழுவதும் தமிழர்களுக்கே என்று 25 வருடதற்கு முன்பு சொன்னது போல.. முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்து விட்டார். மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார்.

2) சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு..

3) அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடியை தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு..

4) படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு..

5) பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணியாற்றியாச்சு..

6) லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு..

இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குரிங்க…?

தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குரீங்களா?

இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா?

அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா?

போதாதுன்னா சொல்லுங்கள்.. அடுத்து வரவுள்ள படத்தில் ஆளுக்கு ஒரு காரு பயிக்கு இப்பிடி குடுக்கிற மாதிரி சீன் போட்டு கலக்கிறறோம்.

அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீங்களா நீங்க?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.