03/02/2018

பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது தமிழினம்...


விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது தமிழினம்..

மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன், மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன் என்று மரணத்தை தழுவிய மாவீரன் குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்..

உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும், உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக் குறித்தும் உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்..

உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை தலைமை தாங்கி நடத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்..

சிந்திப்போம் தமிழர்களே...

தமிழால் ஒன்றுபடுவோம்..
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்..

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்..

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து இனத்தால் ஒன்றுபடுவோம்...

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்..

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்..

இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்..

புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.