03/02/2018

இலுமினாட்டி யும் போகன் படமும்...


தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள்..  இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்..

இதுநாள் வரையில் ஆயுதங்களைக் கொண்டுத் தாக்கிய நம் பகைவர்கள் தற்போது உளவியலாக தொடர்ச்சியாக தாக்குகிறார்கள்...

தமிழக திரைத்துறை முழுமைக்கும் இரகசிய குழுமங்களால் நிறுவகிக்கப்பட்டு வருகிறது..

போகன் என்ற படம் முழுமைக்கும் உளவியல் தாக்குதல் மட்டுமே (psychological warfare)..

தாக்குதல் ஒன்று : கதாநாயகி அறிமுகக் காட்சியிலேயே மதுபாணக் கடையில்  மது வாங்குவது.. அதை குடிப்பது ஏதோ ஆரோக்கியமானது போல் அதை பாப்பாய் கீரை உண்பதுடன் ஒப்பிடுவது..

பெண்கள் இதுவரை தமிழகத்தில் 95% குடிப்பதில்லை, இது இலுமினாட்டி மதுபான வியாபாரிகளுக்கு எப்படி லாபமீட்டித் தரும்?

அப்போ பெண்களும் குடிக்க வேண்டும் அல்லவா ?

அதான் தொடர்ச்சியாக எல்லாப் படத்தில் வரும் கதாநாயகிகளையும் குடிகாரிகலாக காட்ட வேண்டும், அதைப் பார்த்து அப்படியே பின்பற்றும் தமிழ் பெண்களும் குடிப்பது ஒரு தவறல்ல என்ற மனநிலைக்கு வர வேண்டும் தானாக வியாபாரம் பெருகும்..

இலுமினாட்டிகள் நம்மை தொடர்ச்சியாக  ஆளனும்.. அதற்கு நாம் குடித்து.. சிந்தித்து வாழாமல் நாசமாய் போகனும்..

பெண்கள் மது அருந்துவது  போன்ற காட்சிகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு புகுத்தப்படும் காட்சிகள்.. மக்களே உஷார்...

தாக்குதல் இரண்டு : சமீபகாலமாக திரைப்படங்களில் வரும் நிச்சயதார்த்த காட்சிகள் அனைத்தும் மோதிரம் மாற்றி கொள்ளும் படியாக, புதிய கலாச்சார உள்ளீட்டோடு இருப்பது அடுத்த உளவியல் தாக்குதல்...

இது ஒன்றும் புதிதல்ல.. சுமார் 30 ஆண்டு காலமாக பிராமன சடங்குகளை கொண்டு மட்டுமே திருமணம் நடப்பதாக காண்பித்து இப்போது அதை உண்மையாக்கிவிட்ட அதே கும்பல் தான் இப்போது இதையும் செய்கிறார்கள்....

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மோதிரம் மாற்றித் தான் தமிழ்நாட்டில் நிச்சய சடங்குகள்  நடைபெறும்... இது ஒரு கலாச்சார சிதைப்பு...

மூன்றாவது தாக்குதல் : பெண்களை கவர்ச்சியாக காண்பித்து பெண்மையை கொச்சையாக வளரும் தலைமுறை சிந்தனையில் பதிய வைப்பது.

வருங்கால தலைமுறைக்கு பெண்கள் கண்ணகியாகவோ, வேலு நாச்சியாராகவோ தெரியமாட்டார்கள்.. சன்னி லியோனியாக மட்டுமே தெரிவார்கள்...

இந்த அளவுக்கு ஆபாசம் நிறைந்த ஒரு படத்திற்கு “U” சர்ட்டிபிகேட் கொடுத்தவன் குடும்பம் நாசமாய் போகட்டும்..

படம் முழுக்க கொச்சை வசனங்கள் வெளிப்படையாக...

இந்த சமூகத்தில் எப்படி ஒரு பிரபாகரன் எப்படி  ஒரு வா.உ.சி எப்படி ஒரு முத்துராமலிங்கதேவர் தோன்றுவார்கள்?
குற்றவாளிகளே இவற்றால் உருவாக்கப்படுவார்கள்......

( குறிப்பு: கற்பழிப்பு குற்றங்களுக்கு அடிப்படை காரணம் ஆண்கள் பெண்மையை மதியாதது தான்.. ஆண்கள் அவ்வாறு மாற்றப்படுவதற்கு அடிப்படைக் காரணம் ஊடகத்தில் பெண்களின் உடம்பை சந்தை படுத்துதலே... )

இந்த படத்தின் தொடக்கத்திலேயே ஒரு பிரபல இலுமினாட்டி சாமியாரின் தத்துவம் இடம் பெற்றது.. அனைத்திற்கும் ஆசைப்படு....

தமிழக இளைஞர்களே எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டும் தான்... உண்மை சுதந்திரத்தை சுவாசிக்க வேண்டும் என் தலைவன் கண்ட தேசத்தை காண வேண்டும்...

தேடுங்கள்.. போராடுங்கள்.. வெற்றி பெறுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.