13/03/2018

தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு - வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு...


தீவிபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர், ஈரோட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.

இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளனர் - வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால்.

காயமடைந்த 17 பேரில், 5 பேர் தேனியிலும், 8 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதி - சத்தியகோபால்.

இறந்தவர்கள் விவரம்...

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது - தேனி ஆட்சியர் பல்லவி.

சென்னையில் இருந்து பெண்களை குரங்கணிக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற தனியார் நிறுவனம் இரவோடு இரவாக மூடல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.