13/03/2018

எங்கே செல்லும் இந்தப் பாதை...


தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலக்கரிச்சுரங்கள்கள், பெட்ரோலிய மண்டலங்கள், மீத்தேன் திட்டத்தால் பெருவாரியான தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட உள்ளீர்கள்.

பொருளாதார வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பசப்பு வார்த்தைகளால் உங்களுக்கு எந்த நம்மையும் விளையப் போவதில்லை.

மாறாக தமிழர்களுக்கு சொந்த மண்ணில் எவ்வித அரசு வேலையும் கிடைத்து விடக்கூடாது என்பதில் இந்திய அரசு அதிதீவிரம் காட்டுகிறது.

அண்டை மாநிலங்களில் இருந்து இனி வரும்காலத்தில் உங்களுக்கு நீர் என்பது கிடைக்கப் போவதில்லை என்பது உறுதி.

நீரும், நிலமும் இல்லாத இந்த மண்ணை விட்டு எங்கு போகப் போகிறீர்கள்.

அண்டை மாநிலங்கள் உங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு உஙகளை அடையாளம் காண்டு அடித்து விரட்டும்.

எந்த நாடும் உங்களை அகதியாக ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

கிடைக்கும் அடுமட்ட வேலைகளைச் செய்து அதன் பக்கவிளைவுகளால் நோய்யுற்று நடைபிணமாய் வாழப்போகிறீர்கள்.

இனி தமிழகத்தில் வேளாண்மை என்ற ஒன்று இல்லாமல் போகப்போகிறது.

அண்டை மாநிலங்களை மட்டுமே உணவுக்காக நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்ப்படப் போகிறது.

கிடைக்கவிருக்கும் அடிமட்ட வேலையை சொற்ப சம்பளத்துக்கு செய்துவிட்டு சோத்துக்கே வழியின்றி நோயோடு வாழுங்கள்.

உங்களுக்காகவே இந்திய அரசு கருணைக்கொலையை பல்லாண்டு விவாதத்திற்குப் பிறகு நடைமுறைப்படுத்த இருக்கிறது.

கருணைக் கொலையில் உங்களுக்கே முன்னுரிமை அதில் போட்டிக்கு எவனும் வரப்போவதில்லை.

அநீதிக்கு எதிராகப் போராடத தமிழினமே...

உங்கள் அழிவை எதிர்கேள்வி இன்றி நீங்களே தேடிக் கொண்டீர்கள்.

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாமாய்
போகப் போகிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.