13/03/2018

மண்ணுக்காக போராடியவர் சிறையில் மௌனம் காப்பது முறையா?


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஆற்று மணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, பன்னாட்டு குளிர்பான ஆலை எதிர்ப்பு, கிரானைட் கனிமவள கொள்ளை, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக, நிலத்தடி நீர் கொள்ளை, மீத்தேன், சாயக்கழிவு, ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை, தாமிரபரணி நீர் மற்றும் மணல் கொள்ளை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை எதிர்த்து, அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் எண்ணற்ற பல இயற்கை வள சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து அதில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து செயல்பட்டு வரும்,

தமிழகத்தின் போராட்ட மனிதர் தோழர் முகிலன் கூடங்குளம் வழக்குகளுக்காக சிறை சென்று இன்றுடன் 175 நாட்களாகிறது.

தமிழக அரசே.. தோழர்.முகிலன் மற்றும் ஒரு இலட்சம் மக்கள் மீதான கூடங்குளம் அணு உலைப் போராட்ட 132 வழக்குகளை ரத்து செய்து விடுதலை செய்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.