10/03/2018

காவல்துறையினர் தன்னை தாக்கியதாக கூறி விவசாயி தற்கொலை முயற்சி...


தூத்துக்குடி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் தன்னை தாக்கியதாக கூறி விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்த மாசி என்ற விவசாயிக்கு அவரது பக்கத்து வீட்டினருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து காவல்துறையினர் மாசியை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது உதவி ஆய்வாளர் துரை என்பவர் மாசியை சரமாரியாக அடித்து உதைத்தாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாசி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.