10/03/2018

புலிகளின் தலைவர் பெயரில் தமிழகத்தில் உணவகம்...


தமிழ் தேசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழகம் ஏற்காடு மலைப் பகுதியில் “தம்பி பிரபாகரன்” என்ற பெயரில் பெருமாள் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

இந்த உணவகம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தனது மகனுக்கு ஈழ பிரபாகரன் என்றும், மகளுக்கு தமிழினி என பெயர் வைத்திருப்பதாகவும் தம்பி பிரபாகரன் உணவகத்தின் உரிமையாளர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது;

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை “தலைவர், மேதகு” என்று அழைப்பதை விட “தம்பி” என்று அழைப்பதே பிடிக்கும் என்பதை புத்தகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.

இதன் காரணமாகவே, மாபெரும் தலைவரை தம்பி என குறிப்பிட்டு உணவகத்திற்கு பெயர் வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.