03/03/2018

கம்யூனிசம் - திராவிடம் - இந்தியம் - ஆரியம் - கிருஸ்துவம் - இஸ்லாம்.. இவை அனைத்தும் வேற்றினத்தாரின் பதுங்கு குழியே...


ஒரு வேளை.... டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு பதிலாக......

ரஸ்ய நிருவனம் ஒப்பந்தம் செய்ய இருந்தால்....

நமது பொதுவுடைமை புரட்சியாளர்கள் என்ன செஞ்சுருப்பாங்க....

நான் சிந்தித்து பார்த்தேன்....

குழப்பமா இருக்கு...

முற்போக்கு எனப்படுவது யாதெனில்..

செவ்விந்தியர்களின் போராட்டத்தை ஆதரிப்பது..
தமிழர்களின் போராட்டத்தை இனவெறி என்பது..

பாலஸ்தீன போராட்டத்தை ஆதரிப்பது..
தமிழின போராட்டத்தை எள்ளி நகையாடுவது..

ஜெய்தாப்பூர் அணு உலையை எதிர்ப்பது..
கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பது..

கேரளாவில் யானைகளை வைத்து திருவிழா நடத்துவதை கமுக்கமாக கடந்து போவது..

தமிழர்களின் ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்பது...

சிரியாவில், ஈராக்கில் கொல்லப்படும் குழந்தைகளுக்காக கதறுவது..

தமிழ் பிள்ளைகள் கொல்லப்பட்டால் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்பது..

பார்ப்பனர்களை வந்தேறிகள் எனக்கூறி திராவிட இன அரசியல் செய்தால் அது முற்போக்கு..

தமிழர்கள் தங்களை தமிழர் என்று சொல்லிவிட்டால் அது பிற்போக்கு..

இப்படியாக தமிழ் நாட்டில் முற்போக்கு வியாபாரிகள் பிஸியாக இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.