24/03/2018

செயின் பறிப்புக் குற்றவாளிகளுக்கு போதை மருந்து சப்ளை செய்த சாகுல்அமீது, இப்ராஹிம் ஆகிய இருவர் சென்னையில் கைது...


சென்னையில் கைதான செயின் பறிப்புக் குற்றவாளிகளிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது.

அதென்ன போதை மருந்து என்று விசாரித்ததில், அது ஒரு இருமலுக்கு சாப்பிடும் மருந்து சார், ஆனால் அதை ஒரு மூடி சாப்பிட்டாலே தூக்கம் வரும். நாங்கள் ஒரு வேலைக்கு ஒரு பாட்டிலை குடிப்போம், சும்மா காற்றில் பறப்பது போல் இருக்கும், உடம்பு முறுக்கிவிட்டது போல் இருக்கும், செயின் பறிக்கும் முன் ஒரு பாட்டில் மருந்தைக் குடித்துவிட்டுக் கிளம்புவோம்.

இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. இதற்காக தனியாக மருந்து மட்டும் வாங்கி விற்கும் கடைகள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளன என்றும் அவற்றை மொத்தமாக வாங்கி தங்களுக்கு விற்பனை செய்வதாகவும்  தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டையில் இரண்டு மெடிக்கல் ஷாப்களில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தி மேற்கண்ட மருத்துகளைக் கைப்பற்றினர்.

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் போதைப் பொருளாக தனி நபருக்கு அதிக அளவில் மருந்தை விற்றதாக சாமி நாயக்கன் தெருவில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் சாஹுல் ஹமீது (62), இப்ராஹிம்(42), ஆகிய இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.