07/05/2018

தமிழே தூய்மையான தென்மொழி என்றும் ..


ஆரியங்கலந்த கொடுந்தமிழே திராவிட மொழிகளாய் - தெலுங்கு,
கன்னடம், மலையாளம், துளுவாய் - திரிந்ததென்று அறியவும்.

வடமொழிக் கலந்து ஆரிய மயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது, திராவிடரும் மீண்டும் தமிழராக மாட்டார்.

அரை ஆரியமும், முக்கால்
ஆரியமுமான திராவிடத்தோடு தமிழை இணைத்தால் அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போல் தமிழும் கெடும், தமிழனும் கெடுவான்.

ஆதலால்,

தமிழ் - தமிழன்- தமிழ்நாடு என்ற சொற்களன்றி,
திராவிடம் - திராவிடன் -
திராவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

தமிழ் வேறு திராவிடம்வேறு என்பதுடன்
ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக.

திராவிடம் என்பதே தீது...

- மொழி ஞாயிறு பாவாணர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.