07/05/2018

கிருஷ்ணகிரியில் குடியிருப்புகள் அருகே சுற்றித்திரியும் காட்டு யானைகள்...


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாண மாவு போடூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள், ஓசூரை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக சுற்றி வருகின்றன. ஏரி, விவசாய நிலங்கள் வழியே உலாவரும் யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் நுழைவதை தடுக்க, யானைகளை தேன்கனிக்கோட்டை வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.