26/06/2018

வெளிநாடுகளில் தமிழர்கள் உயர்பதவிகளில், தமிழகத்தில் வேற்றினத்தார் பதவியில் கூடாதா?


வெளிநாடுகளில் தமிழர் உயர்பதவிகளை வகிப்பதைப் பெருமையாகப் பதிவிடுகிறீர்கள்.

இங்கே தமிழரல்லாதார் பதவியிலிருப்பதை ஏன் ஏற்க முடியவில்லை?

இதற்கான பதில்...

வெளிநாடுகளில் தமிழர்கள் எத்தனை சதவீத எண்ணிக்கையில் வாழ்கின்றனரோ.. அதைவிடக் குறைவாகவே அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது.

வெளிநாடுகளில் தமிழர் கணிசமாக வாழும் பகுதிகளில். ஒன்றிரண்டு அரசு பதவிகளிலோ,அத்திபூத்தாற்போல அமைச்சராகவோ நீதிபதியாகவோ தமிழர்கள் உயர்கின்றனர்.

அதுவும் கடின உழைப்பாலும் திறமையாலும்.

தமிழரல்லாதார் இங்கே எத்தனை சதவீதம் வாழ்கின்றனரோ அதற்கேற்றாற்போல பதவிகள் அதிகாரங்கள் பெறுவது தவறில்லை.

ஆனால், இங்கே தலைமை முதற்கொண்டு அத்தனை அதிகாரங்களும் வந்தேறிகள் கையில்.

3% பார்ப்பனன் நம்மை ஆளலாமா என்று கூறிவிட்டு.. மொத்தமே 300 குடும்பங்கள் கூட தேறாத வந்தேறி சமூகங்கள் தமிழகத்தை மாறி மாறி ஆள்கின்றன.

இதில் கடல்கடந்து அகதியாய்ப் போய் திறமையால் உயரும் ஓரிரு தமிழரைப் பார்த்து பொறாமை வேறு?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.