19/07/2018

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மாமூல் கேட்டு தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய ரவுடிகள...


ஜிஎஸ்டி சாலை ஓரமாக தள்ளுவண்டி கடையில் சிற்றுண்டி விற்றுவந்த முதியவரிடம், அதே பகுதியை சேர்ந்த சிவா, சதிஷ் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர மறுத்ததால், இருவரும் சேர்ந்து முதியவரை தாக்கினர். அங்கிருந்து ஓடி முயன்ற முதியவரை விடாமல் பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவத்தின் போது முதியவரை காப்பாற்ற யாரும் முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முதியவர் ஒருவரை ரவுடிகள் தாக்கிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றியில் பதிவாகியது.அதன் உதவியால் தற்போது இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார், விசாரணை நடத்தி ரவுடிகள் சிவா, சதீஷை கைது செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.