28/10/2018

கற்பை நிரூபிக்க மனைவியை நெருப்பில் சுட்ட கணவன்.. மந்திரவாதி முன்னிலையில் தண்டனை...


உத்தரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் நம்பிக்கை இல்லை என கூறி பஞ்சாயத்து வரை விஷயத்தை கொண்டு போனார்.

அங்கிருந்த மந்திராவதி நெருப்பில் கை வைக்குமாறும், சூடு படாதவர்கள் பொய் சொல்லவில்லை,  சூடு பட்டால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றும் கூறினார்.

அதன்படி எரியும் நெருப்பில் முதலில் கையை  வைத்த கணவன் சில நொடிகளில் கையை எடுத்து கொண்டார். பின்னர் மனைவி கையை வைக்கும்போது கணவன் வெளியே எடுக்காதபடி அழுத்தி பிடித்து கொண்டார். இதனால் மனைவியின் கை வெந்து போனது.

இது தொடர்பான புகைப்படம் வைரலானதை தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.