18/10/2018

கடன் வேண்டுமானால் படுக்கைக்கு வா என அழைத்த மேனேஜர்.. நடுரோட்டில் செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்த பெண்...


கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்த பெண் ஒருவர் சுயதொழில் செய்வதற்காக தனியார் வங்கியில் ரூ 2 லட்சம் கடன் கேட்டிருந்தார். எனவே கடன் குறித்து பேச வேண்டும் என அந்த பெண்ணை மேனேஜர் தேவய்யா தனது வீட்டுக்கு அழைத்தார்.

அந்த பெண்ணும் கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மேனேஜரின் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றவுடன் அவர் வீட்டின் கதவை சாத்தி தாழ்பாள் போட்டார். பின்னர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் கடன் கிடைக்கும் என்று கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மேனேஜரை தரதரவென வெளியில் இழுத்து வந்து நடுரோட்டில் உருட்டு கட்டையால் அடித்துள்ளார். மேலும் செருப்பால் அடித்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மேனேஜரை மீட்டு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.