18/10/2018

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு...


தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி கடந்த 26-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உரையாற்றினார்.

இந்த நிலையில் கலவரத்தைத் தூண்டுதல், சாதி இன மொழி ரீதியாக மோதலை தூண்டுதல், இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கி மிரட்டும் தொனியில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.