18/10/2018

ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்...


இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் 424 மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

அப்போது பள்ளியில் இலவச ரோபோட்டிக் பயிற்சி மூலம் மாணவர்கள் தாங்களே உருவாக்கிய ரோபோக்களை காட்சிப்படுத்தினர். பின்னர் ட்ரோன் ஒன்றையும் மாணவர்கள் பறக்கவிட்டனர்.

பபார்வையிட்ட அமைச்சர் செங்கோட்டையன், ட்ரோன் மற்றும் ரோபோக்களை உருவாக்கிய மாணவர்களை பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை பொருத்தவரை தமிழகத்தில் கல்வி இடைநிற்றல் சதவீதம் குறைவாகவே உள்ளது என கூறினார். 

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.