18/11/2018

காகங்களும் என் நட்பும்...


தினமும் என்னை சந்திக்காமல் செல்வது கிடையாது எனது நண்பர்கள்...

காலையில் உணவு அருந்தும் வேலையில் முதல் உணவு இவர்களுக்கு எங்கே இருந்தாலும் நான் அழைக்காமல் வந்து விடுவார்கள்..

(மனதில் மட்டுமே நினைத்து  அழைப்பேன்)..

மதியம் நான் வீட்டிற்கு வந்தவுடன் எங்கே இருந்தாலும் என்னை தேடி வருகிறார்கள்..

உணவு வைக்கும் வரை பொருமை காத்து தன் நண்பர்களை அழைத்து உணவு உண்டு விட்டு..

நன்றி சொல்லிவிட்டு செல்கிறார்கள்..

என்னை பார்க்கும் பார்வை அவ்வளவு அழகு.. அது ஒரு உணர்வு...

நான் செல்லும் வழியில் எதாவது ஒரு ஆபத்து வரப் போகிறது என்றால்.. எங்கிருந்தாலும் என் முன்பு வந்து எச்சரிக்கை தந்து காப்பதிலும் தவறாமல் செய்கிறார்கள்...

நான் தனிமையில் எங்கிருந்தாலும்.. தன் நண்பர்களோடு என்னை சூழ்ந்து.. உன்னுடன் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லி... அங்கேயும் வந்து உணவு கேட்டு உண்பார்கள்...

தன் நட்பையும்.. நன்றியை... எப்போதும் மறவாத என் நம்பிக்கைக்குறிய நண்பர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.