18/11/2018

இந்த வலிகள் உணர்த்துவது ஒன்றே ஒன்று தான்...


உங்களுக்கு எதுவும் நடக்காத வரை, என் வலிகள் உங்களுக்கு வெறும் புகைப்படம் மட்டும் தான்..

ஒருவேளை என் சாதி/மதம்/சமூகம் இந்த உலகத்தை ஆளலாம்,

ஆனால் நான்..?

நாங்கள் ஏன்..? பிறந்தோம் என சிந்திப்பதற்குள்ளயே, எங்களின் வாழ்க்கை முடிந்து விடுகிறது...

அனுதாபத்தையும், உதவியையும் நான் எதிர்பார்க்க வில்லை..

இந்த நிலைமைக்கு எங்களை ஆக்கிய, அரசியலை அடுத்த தலைமுறைக்கு எடுத்து கூறுங்கள்..

ஏதோ ஒரு பெரும் பணக்காரனின் சொத்தை விற்றால், உலகம் முழுக்க இருக்கின்ற ஏழ்மையை ஒழித்து விடலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

அவன் ஏன்..? இன்னும் அப்படி செய்யவில்லை என கேளுங்கள்..

ஏழ்மை இங்கு உருவாகவில்லை, யாரோ சிலரின் பேராசைக்காக உருவாக்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.