03/11/2018

சமூக வலைத்தளவாசிகளுக்கு மாணவர் ராகுல் நன்றி...


செல்பி விவகாரம்  நடிகர் சிவகுமார் சார்பில் மாணவனுக்கு புதிய செல்போன் வழங்கப்பட்டது; சமூக வலைத்தளவாசிகளுக்கு மாணவர் ராகுல் நன்றி கூறியுள்ளார்.

கடந்த 28ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமாரை மதுரை சிங்காரபுரம்  பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராகுல் என்பவர்  செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது நடிகர் சிவகுமார் செல்போனை தட்டிவிட்டதில் செல்போன் உடைந்தது.

இந்நிலையில்,  நடிகர் சிவகுமாரின் செயலை கண்டித்து நெட்டீசன்கள் சமூக வலைத்தளங்களில் களமாட தொடங்கினார். அதனை தொடர்ந்து நடிகர் சிவகுமார் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவகுமார் சார்பில் கல்லூரி மாணவருக்கு இன்று புதிய செல்போன் வழங்கப்பட்டது. சமுக வலைத்தளவாசிகளுக்கு கல்லூரி மாணவர் ராகுல் நன்றி தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.