15/11/2018

இது நம் பிள்ளைக்கான எதிர்கால பாதுகாப்புகானது என்று தொடங்கப்பட்ட வணிகம்...


இதற்கென்று supervisor, sample collecter,  என நிறையபேர் இருக்காங்க...

தனியார் மருத்துவமனையில் மட்டும் தடம் பதித்த இந்த அமைப்பு அரசுபணியில் இருக்கும் தனியார் மருத்தவமனை உரிமையாளர்களால் மெல்ல தனக்கென தடம் பதித்து கொண்டு இருக்கிறது...

இதற்கான விளம்பரம் மிகபெரிய பிரபலங்களை வைத்தே எடுக்கப்படுகிறது... காரணம் பிரபலங்கள் எதை சொன்னாலும் சிந்திக்காமல் ஏற்றுகொள்வோம் என்பது அனைத்து வணிகனும் அறிந்ததே...

பிரபலங்கள் என்றுமே பெரு நிறுவனங்களின் விளம்பரதூதர்கள் மட்டுமே.இதனை உணர்ந்து செயல்படுங்கள்....

தொப்புள்கொடியை பாதுகாக்க நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை குறித்த நேரத்தில் கொடுத்தாக வேண்டும்...

எனக்கு தெரிந்து நமது தொப்புள் கொடியை பதப்படுத்தி அதனை தாயத்தில் பத்திரப்படுத்தி வைப்பார்கள் என்று படித்திருக்கிறேன்...

ஆனால் இன்று நம் பாரம்பரியத்தை மறந்துவிட்டோம் அதனால் அவர்கள் இதனை வணிகமாக மாற்றிவிட்டார்கள்...

இவர்களின் ஆயுதம் நம் அறியாமையும், குழந்தையின் மேல் உள்ள அன்பும் தான்.அவர்கள் சொல்லும் எதையும் ஏற்கும் அளவில் மூளைச்சலவை செய்வார்கள், சில சமயம் குழந்தையின் உடல்நலனில் பிரச்சினை என்று பயம்முறுத்தவும் செய்வார்கள்...

கருஉருவாவதில் இருந்து கரு வளர்ச்சி அடைந்து குழந்தைபிறந்து வளரும் வரையில் மருத்துவ வணிகர்களின் பங்கு மிக அதிகம்...

அவர்களின் சோதனை பொருளாகவே நம் பிள்ளைகள் பிறப்பிக்கப்படுகிறார்கள்...

இந்த செயல்முறையை முடிந்த அளவு தவிர்திடுங்கள்...இது தேவையற்ற செலவு தான்... இந்த தொப்புள் கொடி மாபெரும் வியாபாரம்...

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது... உளாவியில் தேடி பாருங்கள் இந்த விடயம் சார்ந்து ...

எதிர்வரும் காலங்களிலாவது நமக்கு தெரிந்த விடயங்களை அடுத்த தலைமுறைக்கு கையளித்து செல்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.