15/11/2018

தனிமை...


தந்தையாக சூரியன் தட்டி எழுப்புகிறார் தினமும் செல்லும் இடமெல்லாம் கைகோர்த்து வருகிறார்..

தோழன் தோழியாக நம்மை சுற்றிலும் காடுகள், மலை, மரங்கள், மழை, ( இயற்கை ) இருக்கிறது..

சொந்தங்களாக நமதுவீட்டு விலங்குகள் இருக்கிறது..

விருந்தாளியாக பறவைகள் வருகிறது..

உடல் நலன் விசாரிப்பதாக நமது முன்னோர்கள்  தினமும் காற்றாக நம்மை சுற்றி சுற்றியே வருகிறார்கள்..

தாயாக நிலவு இரவில் உரங்க வைக்கிறாள்..

தாயுடன் தாயின் தோழிகள் நட்சத்திரமாக வருகிறார்கள்..

இவை அனைவரும்  இருக்கும் போது மனிதன் எப்படி தனிமையை உணர முடியும்..

தனிமை என்பது மனிதனின் மனம் மட்டுமே உருவாக்கி கொள்ளும் கற்பனை..

மகிழ்ந்து இருங்கள் வாழ்க்கையில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.