30/12/2018

இமயத்தின் அடிவாரத்தில் அறியப்படாத நாகரிகம்...


ஒரு ரஷ்ய-இந்திய பயணமானது; இமாலயத்தின் அடிவாரத்தில், அறியப்படாத ஒரு நாகரிகத்திற்கு சொந்தமான பண்டைய சடங்கு வளாகங்களையும், தனித்துவமான கல் உருவங்களையும் கண்டுபிடித்துள்ளது, இந்த குழுவில் ரஷ்ய அகாடமி ஆஃப் சயின்ஸின், விக்கியெஸ்லவ் மோலடின் என்ற தொல்பொருளியல் நிறுவனத்தின் துணை இயக்குநர் உள்ளார்.

இந்த கண்டுபிடிப்புகள் இடைக்காலத்திற்கு முந்தையவை, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சடங்கு வளாகங்கள் மலைகளின் தொலைதூர மற்றும் உயர்ந்த இடங்களில் அமைந்திருக்கின்றன. அந்த இடங்களில் சுமார் 200 குதிரை வீரர்களின் சிற்பங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் இரண்டு மூன்று வீரர்கள் குதிரை மீது சவாரி செய்வது போலவும்,மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்டதாகவும் சிற்பங்கள் உள்ளது "

ஒவ்வொரு சிற்பமும் ஒரே பாணியில் தயாரிக்கப்படுகின்றன, மேலும் அவை ஒவ்வொன்றும் தனித்துவமானது என்றாலும், அவை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த கலை கண்டுபிடிப்புகள் இதுவரை கவனிக்கப்படாதவை என்கின்றனர். இந்த சிற்பங்களுக்கு அருகில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல நீர் ஆதாரங்கள் மற்றும் பிற பாறை கட்டமைப்புகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு வளர்ந்த ஒரு நீண்ட அழிந்த நாகரிகத்தை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இந்த சடங்கு பாரம்பரியத்திற்க்கு பின்னால் உள்ள நாகரிகம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை, என்று மோலடின் கூறுகிறார், ஏனெனில் இது போன்ற கலைகள் மற்றும் கட்டமைப்புகள் இந்தியாவின் எந்தவித கலைகளின் வரலாற்றில் காணப்படவில்லை. எனவே இது #ஆரிய_திராவிட கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது. "இது திடீரென இமயமலையில் தோன்றி, தொலைதூர இடங்களில் குடியேறி பின்னால் இந்த இடத்தை விட்டு வெளியேறியது அல்லது மறைந்தது மாயன் போல" என்று ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறனர்.

மோலோடின் அவர்கள், இந்த கண்டுபிடிப்புகள் ஆச்சரியம் மற்றும் அற்புதமானவை. "இந்தியாவைப் பற்றி ஏற்கெனவே எல்லாவற்றையும் அறிந்திருக்கிறோம், ஆனால் அறிவியல் விஞ்ஞானம் இந்த நாகரீகம் பற்றி  கேள்விப்பட்ட, வெளியிடப்பட்ட சான்றுகள் சாட்சிகள் எதுவும் இல்லை. (ஒருவேளை இந்த குதிரை வீரர்கள், தங்கள் சக்திக்கு மீறியவர்களிடம் போரிட்டதை நினைவுப்படுத்துவதாகவே உள்ளது என்ற ஒரு கருத்து நிலவுகிறது.!) இந்த கண்டுபிடிப்பு, நமது கிரகத்தைப் பற்றிய முழுமையாக அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்பதையே காட்டுகிறது "என்று RIA ( Radio ஐmmune அssay) நோவோஸ்டி வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

மேலும் மற்றொரு ரஷ்ய அறிஞர், நடாலியா பொலோஸ்மாக்கின் தலைமையிலான பயணம் மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகிறது. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் எல்லைகளுக்கு இடையிலான கடினமான சூழ்நிலையில் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் தடைபட்டன. ரஷ்ய அறிவியல் நிதியம் மற்றும் ஜெர்மனியின் ஹென்ல்கெல் ஃபவுண்டேஷன் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மானியங்கள் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியத்தில் அவர்களுக்கு சாதகமா எந்தவித விசயங்களும் இல்லை என்பதால் ஆய்வில் ஆர்வம் அற்றே உள்ளனர்.. இவர்களை விட அவர்களின் ஆய்வுகளில்தான் திரிப்புகள், சித்தரிப்புகள், மறைப்புகள் இல்லாத உண்மைதன்மை இருக்கும் என்று நம்புவோமாக..  காத்திருப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.