23/12/2018

திருமணம் நிச்சயிக்கப்பட்ட அக்காவை பலாத்காரம் செய்த தம்பி.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்...


புதுச்சேரியில் உள்ள குயவர்பாளையத்தை சேர்ந்தவர்கள் பூபதி-அகிலாண்டேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு அம்சபிரியா  என்ற பெண் இருந்தார்.  25 வயதான இவருக்கு காதலனுடன் ஜனவரி 27ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சம்பவத்தன்று அம்சபிரியாவின் பெற்றோர் திருமண விஷயமாக வெளியில் சென்று விட்டு விடு திரும்பினர். அப்போது கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்  உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அம்சபிரியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலையாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், அம்சபிரியா இரண்டுக்கும் மேற்பட்டோரால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொலை நடந்த அன்று வீட்டுக்குள் சென்ற ஒரே நபரான  பக்கத்து வீட்டை சேர்ந்த தீபக்கை போலீசார் விசாரித்தனர். ஆனால் உறவினர்கள் அவனுக்கு 21 வயதுதான் ஆகிறது. இருவரும் அக்கா, தம்பி போலத்தான் பழகி வந்துள்ளனர். அவன் அந்த பெண்ணை அக்கா என்றுதான் அழைப்பான் என்று கூறினர்.

இதனை ஏற்று கொள்ளாத போலீசார் தீபக்கை போலீஸ் நிலையம் அழைத்து சென்று உரிய முறையில் விசாரித்தனர். அதில் வலி தாளாமல் தீபக் அம்சபிரியாவை நண்பனுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்பு கொண்டான்.

சம்பவத்தன்று அம்சபிரியா வெளியில் நின்றுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த தீபக் தனது நண்பனுடன் வீட்டுக்குள் சென்று பலாத்காரம் செய்தான். பின்னர் இந்த விஷயம் வெளியில் தெரிந்து விடும்  என்ற பயத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.